மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஆஸ்திரேலியா: உச்சத்தை தொடும் கரோனா பாதிப்புகள்

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூலை 2022, 11:22 am

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி கரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை திங்கள் கிழமை 5433 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் 5390 ஆக இருந்த்தது. 

குளிர் காலம் தொடங்க இருப்பதால் அடுத்த வாரங்களில் இன்னும் பாதிப்புகள் அதிகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளின் மீது பெரிய அழுத்ததை ஏற்படுத்துமென தகவல் சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மருத்துவக்குழுவின் துணைத்தலைவர் கிரிஸ் மோய்,  “கரோனா பாதிப்புகள் புதிய  உச்சத்தை தொடும்” எனக் கூறியுள்ளார். 
 
இறுதியாக வந்த தகவலின்படி திங்கள் கிழமை மதியம் மொத்த கரோனா பாதிப்புகள் 9,139,047. இதில் 11,200 மரணங்களும் அடங்கும். செவ்வாய்கிழமை புதியதாக 40,000 கரோனா பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 90க்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை எண்ணிக்கைகள் இல்லை எனவும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.