உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 780-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து உலகம் முழுவதும் 780 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய் தொடா்பான ஆய்வகத் தகவல்கள் போதிய அளவில் கிடைக்காததால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
இருந்தாலும், குரங்கு அம்மை மேலும் பல நாடுகளுக்கு வேகமாகப் பரவும் என்று அஞ்சத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.