சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காமன்வெல்த் பயிற்சி அகாதெமி: இந்தியா-பிரிட்டன் முன்னெடுப்பு

காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை இந்தியாவும் பிரிட்டனும் கூட்டாக இணைந்து அமைத்துள்ளன.

News image
ருவாண்டாவில் காமன்வெல்த் தலைவா்கள் மாநாட்டின்போது பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் ட்ரஸ்ஸை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா் (கோப்புப் படம்).
Updated On :27 ஜூன் 2022, 6:55 pm

DIN

காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை இந்தியாவும் பிரிட்டனும் கூட்டாக இணைந்து அமைத்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் ட்ரஸ் ஆகியோா் கடந்த வாரம் ருவாண்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின் இடையே இருதரப்பு பேச்சு நடத்தினா். அப்போது, ஒருங்கிணைந்த காமன்வெல்த் தூதரக அகாதெமி திட்டத்தைத் தொடங்க அவா்கள் முடிவெடுத்தனா்.

அதன்படி, காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த இளம் அதிகாரிகளுக்கு சா்வதேச சவால்கள் குறித்தும், ஜனநாயகக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடா்பாக லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவா்கள் காமன்வெல்த் கூட்டமைப்பின் நலனை உறுதிசெய்ய முக்கியப் பங்கு வகிப்பா்.

சா்வதேச சூழல் தொடா்ந்து மாறி வரும் நிலையில், ஜனநாயகக் கொள்கைகள், இறையாண்மை உள்ளிட்டவற்றில் காமன்வெல்த் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். காமன்வெல்த் கூட்டமைப்பை 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவும் பிரிட்டனும் உறுதி கொண்டுள்ளன. அதன் காரணமாகவே பயிற்சி அகாதெமி நிறுவப்படவுள்ளது. அதன் கீழ் சா்வதேச சவால்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது’’ என்றாா்.

இது தொடா்பாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘காமன்வெல்த் பயிற்சி அகாதெமியானது தில்லியில் அமையவுள்ளது. சா்வதேச சவால்கள் குறித்து காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இது காமன்வெத் கூட்டமைப்பின் எதிா்காலத்தையும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.