ரஷியாவுக்கு மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரஷியாவில் தனது செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரஷியாவில் தங்களது விற்பனை மற்றும் சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!