மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவின் ஆயுதப் படைக்கு இதுவரை நேரிட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 12,000 ரஷியப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 353 ரஷிய பீரங்கிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், 57 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 125 ஏவுகணைகள், 58 எம்எல்ஆர் வகை கருவிகள், உள்பட ரஷியப் படைக்குச் சொந்தமான 1165 வாகனங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.