இலங்கை: இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது குடும்பத்தினா் பதவி விலகினா். இதையடுத்து, 26-ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
இதையும் படிக்க: இந்தியாவில் கோதுமை கையிருப்பு மேலும் வீழ்ச்சியடையலாம்
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21-ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டா்னி ஜெனரல் அலுவலகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார். அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 20ஏ சட்டத்திருத்தத்துக்கு எதிராக 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற சமா்ப்பிக்கப்படும் என்று ரணில் விக்கரமசிங்க சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.