ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆஸி. புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்பு

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று பதவியேற்றுக் கொண்டார். 

News image
Updated On :23 மே 2022, 8:14 am IST

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று பதவியேற்றுக் கொண்டார். 

ஆஸ்திரேலியாவின் 47-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபா் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. தோ்தலில், ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேபா் கட்சி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் 31ஆவது பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். புதிய பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேபா் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேபா் கட்சி அரசுகளில் கேபினா் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.