புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாதியாகக் குறையும் ட்விட்டர் பணியாளர்கள் எண்ணிக்கை? எலான் மஸ்க் திட்டம்

புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின்  பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

எலான் மஸ்க்

Updated On :3 நவம்பர் 2022, 10:48 am

DIN

புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின்  பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் ரூ.352000 கோடிக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் டிவிட்டர் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாகக் குறைக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 7400 பணியாளர்களில் 3700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையையும் அவர் திரும்பப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.