தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு!

பாலஸ்தீனத்தின் காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :29 நவம்பர் 2022, 10:07 am

பாலஸ்தீனத்தின் காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ரேல் கடலோரப் பகுதியில் விதிக்கப்பட்ட முற்றுகையாலும், இந்த பகுதியில் வறுமை விகிதம் 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாலஸ்தீனிய சர்வதேச கவுன்சில் கூறுகையில், 

2007-ஆம் ஆண்டு ஹமாஸ் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதி இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் உள்ளது. 

ஹமாஸ் ஆளுகைக்கு உள்பட்ட கடலோரப் பகுதியானது 360 சதுர கி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது உலகின் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச அமைப்புகளின் மானியங்களை நம்பியுள்ளனர்.

காசா பகுதியில் 16 ஆண்டுகளாக இஸ்ரேல் விதித்துள்ள முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.