ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுக் காவல் துறை தெரிவித்துள்ளது.  

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 10:41 am

DIN

தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுக் காவல் துறை தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவின் நட்டால் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. 

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகில் அதிக அளவிலான மக்கள் பயங்கரமாக கொல்லப்படும் நாடுகளின் ஒன்று தென்னாப்பிரிக்கா. அண்மைக் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவின் தென் கடலோர நகரம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல கடந்த ஆண்டு மதுபான விற்பனைக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.