தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காணாமல் போன 10 வங்கதேச மீனவர்கள் சடலமாக கண்டெடுப்பு

வங்கக் கடலில் காணாமல் போன மீனவர்கள் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :24 ஏப்ரல் 2023, 5:20 am

DIN

வங்கக் கடலில் காணாமல் போன மீனவர்கள் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர். 

சோனாடியா தீவின் மேற்கு பகுதியில் மீன்பிடி படகு மிதப்பதை கண்ட உள்ளூர்வாசிகள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மீன்பிடி படகின் குளிர்பதனக் கிடங்கில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் அனைவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார். 

தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டனர். தொடர்ந்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குறைந்தது 10 முதல் 12 நாட்களுக்கு முன்பு ஒரு கொள்ளை கும்பல் மீனவர்களை தாக்கி கொன்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காணாமல் போன மீனவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வங்கதேச மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.