மியான்மரில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு! 

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 
மியான்மரில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு! 
Updated on
1 min read

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

மியான்மரின் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. எனவே அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கச்சின் மாகாணத்தின் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com