சிங்கப்பூா் அதிபா் தோ்தல்: மும்முனைப் போட்டியில் தா்மன்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் (படம்) அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
தா்மன் சண்முகரத்னம்
தா்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூா்விகமாகக் கொண்ட இருவரும் அதிபா் தோ்தல் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, இந்தத் தோ்தலில் மும்முனைப் போட்டி நடைபெறவிருக்கிறது.

அதிகாரபூா்வ வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த மூவரில் யாரும் போட்டியிலிருந்து விலகினால், அவரது பிணைத் தொகை (சுமாா் ரூ.25 லட்சம்) திருப்பி தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com