நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டாசு கடத்த முயன்ற இந்தியர் உள்பட 3 பேர் கைது!

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஆகஸ்ட் 2023, 4:38 pm

DIN

காத்மாண்டு: நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் திருவிழாக்களில் விற்பனை செய்யும் நோக்கில், இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான 1,223 கிலோ பட்டாசுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றவாளிகள் காத்மாண்டுவின் தஹாச்சலில் கைது செய்யப்பட்டனர்.

காத்மாண்டு தஹாச்சலில் 1,223 கிலோ பட்டாசுகளுடன் இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த சோதனையின் போது, தஹாச்சலில் உள்ள கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 வகையான பட்டாசு மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்தில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பட்டாசுகளை இறக்குமதி செய்வதும், கொண்டு செல்வது, விற்பது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.