பட்டாசு கடத்த முயன்ற இந்தியர் உள்பட 3 பேர் கைது!

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காத்மாண்டு: நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஏராளமான பட்டாசுகளை கடத்த முயன்றதாக இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் திருவிழாக்களில் விற்பனை செய்யும் நோக்கில், இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான 1,223 கிலோ பட்டாசுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றவாளிகள் காத்மாண்டுவின் தஹாச்சலில் கைது செய்யப்பட்டனர்.

காத்மாண்டு தஹாச்சலில் 1,223 கிலோ பட்டாசுகளுடன் இந்தியர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த சோதனையின் போது, தஹாச்சலில் உள்ள கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 வகையான பட்டாசு மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்தில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பட்டாசுகளை இறக்குமதி செய்வதும், கொண்டு செல்வது, விற்பது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com