நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கிரீஸில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி!

கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப் படம்.

Updated On :29 ஆகஸ்ட் 2023, 8:12 am

கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

சமோஸ் தீவில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த பெண் மற்றும் குழந்தை பலியாகினர். மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 

இதேபோன்று மற்றொரு படகு லெஸ்வோஸ் தீவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபோது கடலில் மூழ்கியது. இதில் 11 மாதக் குழந்தை, 8 வயது சிறுமி, உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 18 பேர் மீட்கப்பட்டனர். 

ஏஜியன் கடலில் நாளொன்றுக்கு 150 - 200 பேர் வருகை தருகின்றனர். ஆகஸ்ட் 1 மற்றும் 20-வரை சுமார் 1,172 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடலில் மீட்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.