பிலிப்பின்ஸின் மிண்டனாவோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின என தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.