நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜாம்பியா சுரங்க விபத்து: ஒருவர் உயிருடன் மீட்பு!

ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில், புதைந்துபோன தொழிலாளர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :6 டிசம்பர் 2023, 3:35 pm IST

ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்துபோன தொழிலாளர்களை மீட்கும் பணி 6 நாள்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தத் தாமிரச்சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மணல் சரிவு ஏற்பட்டு விபத்தானது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். 

மேலும், இறந்த ஒரு தொழிலாளரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக ஜாம்பியா பேரிடர் மேலாண்மைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடிபாடுகளில் மொத்தம் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற சரியான விவரம் கிடைக்காத நிலையில், 25 குடும்பங்கள், காணாமல் போன உறவினர்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக ஜாம்பியாவின் சுரங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

புதைந்த சுரங்கத்திலிருந்து பல குரல்கள் கேட்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.