ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டைம்ஸ் நாளிதழின் ‘இந்த ஆண்டின் சிறந்த நபர்’ இவர்தான்!

டைம்ஸ் நாளிதழ் ஆண்டுக்கு ஒருமுறை இந்த விருதை அறிவித்து வருகிறது.

டெய்லர் ஸ்விஃப்ட்| AP

Published On :6 பிப்ரவரி 2024, 6:52 pm IST

டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும்.

2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்க பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட். 

இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “டெய்லரின் சாதனைகள்- கலாச்சார, விமர்சன மற்றும் வணிகரீதியாக - திரண்டு நிற்கிறது. அவற்றைப் பட்டியலிடுவது இயலாத காரியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

2023-ல் பல சமயங்களில் நாளிதழ்களில் தலைப்பு செய்தியில் அடிபடும் பெயராக டெய்லர் ஸ்விஃப்ட் இருந்துள்ளார். அக்டோபரில் வெளியான அவரது இசை நிகழ்ச்சிகள் திரைப்படம் ‘எராஸ் டூர்’ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டைம்ஸ் நாளிதழ், கடந்த ஆண்டு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை அந்தாண்டுக்கான நபராகத் தேர்வு செய்தது. 2021-ல் எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டார்.

நபர்களுக்கு மட்டுமில்லாமல் குழு அல்லது பொருள் அல்லது கருத்துருக்களுக்கும், டைம்ஸின் அந்தாண்டுக்கான நபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.