சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரேல் ராணுவத்தின் அநீதி?

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

News image
இஸ்ரேல் ராணுவம் | AP
Updated On :9 டிசம்பர் 2023, 3:40 am

DIN

இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் ஹமாஸ் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கும் பாலஸ்தீனர்களைத் தடுத்து வைத்துள்ளது. அதே வேளையில் தெற்கு காஸாவில் மிகக் குறுகிய பரப்புக்குள் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு காஸாவின் பீட் லஹியா பகுதியில் சந்தேகத்துக்குரிய பாலஸ்தீனர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன ஆண்கள் மேலாடைகளின்றி உள்ளாடையுடன் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றிலும் இஸ்ரேல் ராணுவத்தினர் உள்ளனர். இவர்களை ராணுவம் விசாரித்து வருகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் | AP Video Capture

தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் | AP Video Capture

ஐ.நா நோக்கர்கள், இஸ்ரேலிய படைகள் 15 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆண்களை முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐநாவில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா எதிராக வாக்களித்துள்ளது. பிரிட்டன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

ஐ.நா பொதுச் செயலர், அன்டானியோ குட்டரெஸ், காஸா உடையும் தருவாயில் உள்ளதாகவும் ஒட்டுமொத்த மனித அமைப்பே உருக்குலையும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய முயற்சிகள் காஸாவில் தோல்வியடைந்துவிட்டதாக ஐ.நா மனிதநேய பிரிவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் செய்வதற்கு அங்கு எதுவுமில்லை என கைவிரித்துள்ளனர்.

தெயிர் அல்-பலா மருத்துவமனையில் காயமுற்ற பாலஸ்தீன தாய் மற்றும் மகன் | AP

தெயிர் அல்-பலா மருத்துவமனையில் காயமுற்ற பாலஸ்தீன தாய் மற்றும் மகன் | AP

மூன்றாவது மாதத்தில் நீடிக்கும் இந்தப் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 17,400-ஐக் கடந்துள்ளது. அவர்களில் 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் 93 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அக்.7 ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.