சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹமாஸ் தாக்குதலில் பலியான 9 இஸ்ரேலிய வீரர்கள்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. காஸாவில் தரைவழி தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றனர் ஹமாஸ் படையினர்.

News image
இஸ்ரேலிய வீரர்கள் | AP
Updated On :13 டிசம்பர் 2023, 12:14 pm

DIN

பாலஸ்தீன ஆயுதப் படையினர், காஸாவில் இஸ்ரேல் வீரர்கள் மீது பதுங்கியிருந்து தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

அக்.7 தொடங்கிய போர், மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து வருகிறது. பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,400 என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள், குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பொதுமக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்குமாறு இஸ்ரேலைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஐநாவில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது விட்டோ அதிகாரம் கொண்டு தடை செய்தது. மேலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அளித்தும் வருகிறது.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தரைவழி தாக்குதல் ஆறு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், வெவ்வேறு இடங்களில் ஹமாஸுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் நேரடியான மோதல் நடந்து வருகிறது.

மக்கள் அதிகம் வாழும் ஷிஜாய்யா பகுதியில் நடந்த மோதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

களச்சோதனையில் இருந்த 4 வீரர்கள் தொலைந்ததையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேலிய வீரர்கள் மீது மறைந்திருந்து ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒன்பது பேரில் மூத்த அதிகாரிகளும் அடக்கம். வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ள இஸ்ரேல் மேற்கொண்டு தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.