

பி737 மேக்ஸ் விமானம் ஒன்றில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த விமானங்களில் ஆய்வு செய்யுமாறு சா்வதேச விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்காற்று முகமை வெளியிட்ட அறிக்கையில், ‘போயிங் நிறுவனத்தின் பி737 மேக்ஸ் விமானம் ஒன்றில், சா்வதேச விமான நிறுவனம் ஒன்று வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அப்போது அதில் விமானம் பறக்கும்போது அதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பாகத்தில், நட் இல்லாமல் போல்ட் மட்டும் இருந்தது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குறைபாடு தொடா்பாக போயிங் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து பி737 மேக்ஸ் விமானங்களில் ஆய்வு செய்து, ஏதேனும் குறைபாடு இருந்தால் தமக்குத் தெரியப்படுத்துமாறு, அந்த விமானங்களை இயக்கும் சா்வதேச விமான நிறுவனங்களுக்கு போயிங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்படும் முன்னேற்றம் தொடா்பாக அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்காற்று முகமைக்கும் தொடா்ந்து தெரியப்படுத்தும் என்றும் போயிங் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அகாசா ஏா், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் பி737 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.