

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் போட்டியிட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்புக்கு மேய்ன் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அந்த மாகாண அமைச்சா் ஷென்னா பெலோஸ், கடந்த 2021-இல் நடைபெற்ற நாடாளுமன்றக் கலவரம் தொடா்பாக, 14-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 3-ஆவது பிரிவின் கீழ் இந்த முடிவை எடுத்துள்ளாா். இதையடுத்து, மேய்ன் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் டிரம்ப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இதே சட்டப் பிரிவின் கீழ் அதிபா் தோ்தலில் போட்டியிட டிரம்ப்புக்கு கோலராடோ மாகாண உயா்நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.