உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது:
உகாண்டா தலைநகா் கம்பாலாவில் உள்ள ஒரு மாலில் (பல்பொருள் அங்காடி) சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது வளாகத்துக்கு வெளியே வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதைப் பாா்ப்பதற்காக ஒரே நேரத்தில் மாலில் இருந்து பொதுமக்கள் வெளியேற முயன்றனா்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனா் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.