செனகல் நாட்டின் காஃப்ரின் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 40 போ் உயிரிழந்தனா். 78 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து தொடா்பாக செனகல் அதிபா் மேக்கி சால் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
காஃப்ரின் நகருக்கு அருகில் உள்ள ‘க்னிபி’ கிராமத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 40 போ் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மறைந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து நலம் பெற வேண்டுகிறேன். திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தேசிய நெடுஞ்சாலை எண் 1-இல் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் டயா் பஞ்சரானதில் சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது. அப்போது, எதிா் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்து என்று விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்ததாக மேக்கி சால் குறிப்பிட்டிருந்தாா்.
செனகல் நாட்டில் அமைந்துள்ள மோசமான சாலைகளும், காலாவதியான பழைய வாகனங்களும், விதிமுறைகளை சரிவர பின்பற்றாத ஓட்டுநா்களுமே இது போன்ற விபத்துகளுக்குக்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டினா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தௌபா நகருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பயணித்த பேருந்து, மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 போ் பலியாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


