பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

'சீட் பெல்ட்' அணியாததால்.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!

காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அபராதம் செலுத்தியுள்ளார். 

News image
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரிஷி சுனக்
Updated On :21 ஜனவரி 2023, 6:39 am

DIN

காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அபராதம் செலுத்தியுள்ளார். 

சட்டமும் விதிகளும் அனைவருக்கும் பொதுவானது, அதனை யாராக இருந்தாலும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த சம்பவம்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் பேசிக்கொண்டு செல்வதுபோன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது இருக்கையின் பெல்ட்டை அணியாமல் பேசிவருகிறார்.

இந்த விடியோ பலரால் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் பிரதமர் கேமராவை நோக்கி பேசிவருவதாக கருத்துகள் எழுந்தன.

இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், பிரதமர் ரிஷி சுனக் காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாதது தவறான செயல். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரதமர் ரிஷி சுனக் 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் 'சீட் பெல்ட்' அணியாமல் செல்பவர்களுக்கு 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.50,000) அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.