பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன.
பல மின்சார ரயில்கள் பாதி வழியில் நின்றுவிட்டதாகவும், மேம்பாலத்தில் இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் விடியோக்களும் டிவிட்டரில் வெளியாகி வருகிறது.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
நாட்டில் மின்சார விநியோக முறை சீர்குலைந்த காரணத்தால், தலைநகர் உள்பட பல முக்கிய நகரங்கள் திங்கள்கிழமை காலை முதல் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக நாட்டின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் மின் தேவையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை 7.34 மணிக்கு இந்த சிக்கல் நேரிட்டதாகவும், இதனால், நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவாக இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனினும், 12 மணி நேரம் ஆகலாம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



