பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நகரங்கள்: நடுவழியில் நிற்கும் ரயில்கள்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன.

News image

பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நகரங்கள்: நடுவழியில் நிற்கும் ரயில்கள்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:17 am IST


பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன.

பல மின்சார ரயில்கள் பாதி வழியில் நின்றுவிட்டதாகவும், மேம்பாலத்தில் இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் விடியோக்களும் டிவிட்டரில் வெளியாகி வருகிறது.

நாட்டில் மின்சார விநியோக முறை சீர்குலைந்த காரணத்தால், தலைநகர் உள்பட பல முக்கிய நகரங்கள் திங்கள்கிழமை காலை முதல் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக நாட்டின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் மின் தேவையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை 7.34 மணிக்கு இந்த சிக்கல் நேரிட்டதாகவும், இதனால், நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவாக இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனினும், 12 மணி நேரம் ஆகலாம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.