அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் மோடியிடம் இந்தியாவில் நடைபெறும் மனித உரிம மீறல்கள் விவகாரம் குறித்து எழுப்ப வேண்டும் என்று அதிபா் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதிய 70 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களில் ஒருவரான மேக்ஸ்வெல் அலெஜான்ட்ரோ ஃப்ரோஸ்டும் அமெரிக்க-இந்திய உறவு மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமா் மோடி வருகை தந்தபோது, சாலையில் வழநெடுகிலும் மக்கள் அவரைக் காண காத்திருந்தனா். உண்மையில், அவா் உலகின் மிகப் பிரபலமான தலைவா்களில் ஒருவா்தான். அவரை வரவேற்றது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்’ என்றாா்.