நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து 11 பேர் பலி!

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :24 ஜூலை 2023, 7:09 am

DIN

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 

வடகிழக்கு சீனாவின் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 

ஞாயிறன்று பிற்பகல் 2.56-க்கு மேற்கூரை சரிந்து விழுந்ததுள்ளதாக மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விபத்து நடைபெற்றபோது லாங்ஷா மாவட்டத்தின் நடுநிலைப் பள்ளியில் 19 பேர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்துள்ளனர். 15 பேர் உடற்பயிற்சி கூடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டதாக மீட்புத் துறையினர் தெரிவித்தனர். மீதமுள்ள நான்கு பேர் காயங்களுடன் உயிர்த் தப்பினர். 

முதற்கட்ட விசாரணையில் பெர்லைட் எனப்படும் கனிம கட்டுமான பொருளை, மேற்கூரையில் வைத்துக் கட்டியது தெரிய வந்துள்ளது. அதிகப்படியான நீரை இந்த கனிமப் பொருள் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே, மழை நீரில் நனைந்து எடை அதிகம் கூடியதில் மேற்கூரை சரிந்து விழுந்தது. 

கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாளர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.