உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர், சீனாவின் உயரமான கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
மிக உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாகச முயற்சியில் ஈடுபடுபவர் ரெமி லூசிடி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், சிறுவயது முதலே கட்டடங்கள் மீது ஏறுவதில் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்.
தற்போது 30 வயதாகும் ரெமி, பல உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கடந்த வாரம், இவர் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள டிரெகன்டர் கோபுரத்தின் மீது ஏற முயன்றுள்ளார். அந்த கட்டடத்தின் 68வது மாடியிலிருந்தவாறு புகைப்படம் எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்துள்ளார்.
எனினும், அவர் கட்டடத்தின் மீது ஏறாமல், மின்தூக்கி வழியாக 68வது மாடிக்கு வந்து சில ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
அவர் தவறி விழுந்ததைப் பார்த்த அக்கட்டத்தின் பணிப்பெண் அளித்த தகவலின்பேரில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினுm அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.