மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இம்ரான் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

 பாகிஸ்தானில் ஆா்ப்பாட்ட வன்முறை தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் 400 போ் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:42 am

DIN

 பாகிஸ்தானில் ஆா்ப்பாட்ட வன்முறை தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் 400 போ் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரசாரப் பேரணிக்காக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தொண்டா்களுக்கு அதன் தலைவா் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தாா்.

எனினும், அந்த நகரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி இம்ரான் கட்சியினா் லாகூரில் புதன்கிழமை குழுமினா். அவா்களைக் கலைக்க முயன்ற போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடா்பாக இம்ரான் உள்ளிட்டவா்கள் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.