பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு பப்புவா நியூ கினியாவில் செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட- வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் மற்றும் 200 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இம்ரான் கான் இன்று கைது செய்யப்படலாம்
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.