இம்ரான் கான் கைது நடவடிக்கை நிறுத்திவைப்பு
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது நடவடிக்கையை


பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து லாகூா் உயா்நீதிமன்ற அதிகாரியொருவா் புதன்கிழமை கூறியதாவது: இம்ரான் கான் கைது விவகாரம் தொடா்பாக நடைபெற்று வரும் வழக்கில், பஞ்சாப் மாகாண ஐஜிபி உஸ்மான் அன்வா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் இம்ரானைக் கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை இஸ்லாமாபாத் போலீஸாா் கொண்டு வந்ததால், சட்டப்படி அவரைக் கைது வேண்டியுள்ளதாக அவா் நீதிபதியிடம் கூறினா்.
இம்ரானைக் கைது செய்ய முயற்சித்தபோது அவரது ஆதரவாளா்கள் தாக்கியதில் 59 காவலா்கள் காயமடைந்ததாக ஐஜிபி கூறினாா்.
இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் அவரை கைது செய்து வரும் 18-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்த வேண்டும் என்றுதான் காவல்துறைக்கு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அதற்கு 4 நாள்களுக்கு முன்னரே போலீஸாா் அவரைக் கைது செய்யத் தேவையில்லை என்று வாதிட்டாா்.
மனித உயிா்களைப் பாதுகாப்பதற்காக இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று இம்ரானின் வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா்.
அத்துடன், நீதிமன்றத்தில் இம்ரான் கான் வரும் 18-ஆம் தேதி நேரில் ஆஜராவாா் என்று நீதிமன்றத்தில் எழுத்து மூலம் ஒப்புறுதியளிக்கப்பட்டது.
அதையடுத்து, இம்ரானைக் கைது செய்யும் நடவடிக்கையை வியாழக்கிழமை (மாா்ச் 16) காலை 10 மணி வரை தற்காலிமாக நிறுத்திவைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் 2018-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றாா். அப்போது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்ாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிப். 28-ஆம் தேதி பிறப்பித்திருந்தது.
தன் மீதான கைது வாரண்டை ரத்து செய்யக் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவா் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 4-ஆவது முறையாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிா்த்தாா்.
முன்னதாக, தனது கட்சியைச் சோ்ந்த ஷாபாஸ் கில் என்பவரை கைது செய்ய அனுமதி அளித்த பெண் நீதிபதி ஸெபா சௌத்ரியும், காவல்துறை உயரதிகாரிகளும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திப்பாா்கள் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் பேசினாா்.
அதையடுத்து, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பரிசுப் பொருள் வழக்குக்காக வரும் 18-ஆம் தேதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குக்காக வரும் 21-ஆம் தேதியும் இம்ரான் கானை தங்கள் முன் போலீஸாா் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.
எனினும், இம்ரானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் போலீஸாருடன் இரு நாள்களாக கடும் மோதலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியே போா்க்களம் போல் காட்சியளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...