நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

செயல்படாத கணக்குகளை நீக்கும் கூகுள்! 

டிசம்பரில் இருந்து செயல்படாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 மே 2023, 7:29 pm IST

டிசம்பரில் இருந்து செயல்படாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.

கூகுள் நிறுவனம் செயல்படாத கணக்குகளுக்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது.  இந்த புதிய கொள்கை அனைத்து கூகுள் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழைந்திருக்காத(log in) தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கான கொள்கையை கூகுள் நிறுவனம் மாற்றியுள்ளது.

2 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் உள்ள கணக்கு மற்றும் மின்னஞ்சல்கள், கோப்புகள், விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.

இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வணிகம், கல்வி உள்ளிட்ட நிறுவன கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கணக்குகளை நீக்கும் முன்பு செயல்படாத மின் அஞ்சல் முகவரிக்கு கூகுளில் இருந்து கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை மின் அஞ்சலை கூகுள் நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை கூகுள் நிறுவனம் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.