எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானார்கள்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சால்வடார். இந்த நாட்டில் சால்வடார் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கஸ்கட்லானில் உள்ள நினைவுச்சின்ன மைதானத்தில் நடைபெற்ற அலியன்சா மற்றும் எஃப்ஏஎஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடினர்.
அப்போது ஒரு நுழைவுவாயிலில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எல் சால்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.