டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தலைவலியாகும் டீப் பேக் தொழில்நுட்பம்: எச்சரிக்கும் பிரிட்டன் உளவு அமைப்பு!

பிரிட்டன் தேர்தலுக்குச் செயற்கை தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News image
செயற்கை நுண்ணறிவு
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

DIN

பிரிட்டனின் இணைய பாதுகாப்பு முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  அடுத்து வரவிருக்கும் அந்நாட்டின் தேர்தலுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரித்துள்ளது.

மேலும், இணையவழி தாக்குதல்கள் எதிரி நாடுகளால் மேற்கொள்ளப்படுவதும் அவற்றின் ஆதரவு ஹேக்கர்களால் அது விரிவடைவதையும் அவற்றை பின்தொடர கடினமானதாக மாறுவதையும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய இணைய பாதுகாப்பு மையம், இந்த ஆண்டு புதிதாக உருவாகியிருக்கும் அபாயம் - அரசுகளின் ஆதரவில் இயங்கும் இணைய அமைப்புகள்தாம். இவற்றால் தேசத்தின் உள்கட்டுமான பிரிவுகளான நீர்,  மின்சாரம் மற்றும் இணைய ஒருங்கிணைப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை கருத்தியல்ரீதியாகவோ மனிதாபிமானரீதியாகவோ இல்லாமல் பொருளியல்ரீதியாக முன்னெடுக்கும் அரசு சார்பு அமைப்புகள் கடந்த ஆண்டு உருவாகியிருப்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

2025-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் பிரிட்டன் தேர்தலையும் அதன் முடிவுகளையும் வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதிக்கும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

டீப் பேக் தொழில்நுட்பத்தால் யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை உருவாக்கவும் எளிதில் நம்ப செய்யவும் இயலும்.

இதற்கு மாற்றாக முன்னர் இருந்த வாக்கெடுப்பு முறையான பென்சில், தாள் கொண்டு வாக்கெடுப்பு எடுப்பது மட்டுமே இந்த ஹேக்கர்களால் ஒன்றும் செய்ய இயலாது எனத் தெரிவிக்கிறது, இந்த முகமையின் அறிக்கை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.