இஸ்ரேல் வீரர்களுக்காக 24 மணிநேரம் இயங்கும் திறந்தவெளி சமையலறை!

இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் திறந்தவெளி சமையலறை காஸா எல்லையில் திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வீரர்களுக்காக 24 மணிநேரம் இயங்கும் திறந்தவெளி சமையலறை!
Published on
Updated on
1 min read


இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் திறந்தவெளி சமையலறை காஸா எல்லையில் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்காக உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல், முடி திருத்தம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவையும் அளிக்கப்படுகின்றன. 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் கடந்த 7ஆம் தேதிமுதல் 13வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதுவரை நடைபெற்ற போரில் 2778 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

காஸாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், வடக்கு காஸாவிலுள்ள பொதுமக்களை  வெளியேறி தெற்கு காஸாவில் குடியேறுமாறு எச்சரித்தது. எனினும், தெற்கு காஸாவின் ராஃபா, கான் யூனிஸ், மத்திய காஸா உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுவீசி, ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com