சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிரோன் டெலிவரியை விரிவுபடுத்தும் அமேசான்

இ-வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் ஏர் டிரோன் விநியோகத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தவிருக்கிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 7:25 am

DIN


இ-வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான அமேசான், தனது பிரைம் ஏர் டிரோன் விநியோகத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் விரைவில் விரிவுபடுத்தவிருக்கிறது.

இது குறித்து வெளியாகிருக்கும் தகவலில், விரைவில் அமேசான் பிரைம் ஏர் தனது ட்ரோன் டெலிவரி சேவையை இத்தாலி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் விரிவுபடுத்துகிறது. மேலும் இதுவரை இந்தச் சேவை கிடைக்கப்பெறாத அமெரிக்க நகரங்களிலும் இந்த திட்டம் விரைவில் வரவுள்ளன. 

அமேசான் நிறுவனம் டெலிவரிக்காகப் பயன்படுத்தும் இந்த ட்ரோன்கள் சுமார் இரண்டரை கிலோ எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்லக்கூடியவை மற்றும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் டிரோன் டெலிவரி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளின் விதிகளுக்கு உள்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமேசான் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டிய பிரிவுகளுக்கு இந்த டிரோன் டெலிவரியைப் பயன்படுத்தவும் இதற்காக எம்கே30 வகை டிரோன்கள் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு முந்தைய டிரோன்களைக் காட்டிலும் திறன் மிகுந்ததாகவும், லேசான மழையிலும் இவை வேலை செய்யும் வகையிலும், மிகவும் புறநகர்ப் பகுதிகளுக்கும் சென்று பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெலிவரி செய்யும் பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இரண்டரைக் கிலோவுக்குக் குறைவான பொருள்களை மக்கள் டிரோன் டெலிவரி மூலமே பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள், அத்தியாவசிய மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள், அலுவலகம் மற்றும் தொழில்நுட்பப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, அமேசான் பார்மஸி தற்போது 60 நிமிடங்களுக்குள் டெக்சாஸில் உள்ள கல்லூரி நிலையத்தில் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மருந்துகளை விரைவாக ட்ரோன் மூலம் டெலிவரி செய்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.