ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமெரிக்க கொலையாளி எங்கே? பூட்டிய வீடுகளுக்குள் மக்கள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
அமெரிக்க கொலையாளி எங்கே?
Updated On :27 அக்டோபர் 2023, 12:18 pm

DIN


லெவிஸ்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவலர்களும் எஃப்பிஐ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மேன் மாகாணத்தில் 40 வயது நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியான நிலையில், கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளையும் பூட்டிய வீடுகளுக்குள்கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடாக இது மாறியிருக்கிறது. முதலில், குற்றவாளி ரிச்சர்ட் கார்டின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் தேடுதல் பணி நடைபெற்றது. ஆயுதம் தாங்கிய டிரக்குகளில், எஃப்பிஐ அதிகாரிகள் உறவினர் வீடுகளை சுற்றிவளைத்து, அங்கிருப்பவர்களை சரணடையுமாறு வலியுறுத்தினர்.

ஆனால், அந்த வீட்டுக்குள் ரிச்சர்ட் கார்டு இல்லை என்று கண்டறியப்பட்டது. இது குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இப்பகுதி அவனுடைய சொந்தஊர். அவர் இங்குதான் வளர்ந்தார், இங்கு ஒளிந்து கொள்ள ஒவ்வொரு விளிம்பையும், ஒவ்வொரு புதர்களையும் அவர் நன்கு அறிவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பகுதியிலிருந்த பல வீடுகளை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அவர் கையில் ஆயுதம் இருப்பதாகவும், அவர் அபாயத்துக்குரியவர் என்பதால், யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.