இந்தியாவில், கிரெடிட் கார்டில் செலவிடுவது 4.23 சதவீதம் குறைந்திருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் இது ரூ.1.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், செப்டம்பரில் ரூ.1.42 லட்சம் கோடியாக சரிந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜூலை மாதம், கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை ரு.1.45 லட்சம் கோடியாகக் குறைந்திருந்த நிலையில், இதைவிடவும் செப்டம்பரில் குறைந்திருக்கிறது.
ஒருபக்கம் கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருந்தாலும், அதே செப்டம்பர் மாதம் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாம். ஆம், 9.3 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்துஸ்தான் வங்கியைத் தவிர, நாட்டில் உள்ள பிற அனைத்து வங்கியின் கிரெடிட் கார்டுகளிலும் செலவினம் குறைந்து உள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை கிட்டத்தட்ட 8.9 சதவீதம் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் வங்கியில் 8.4 சதவீதம் குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. எப்படி இருந்த நான்.. காஸாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
ஒருபக்கம் செலவினம் குறைந்திருக்கும் நிலையில், அதே செப்டம்பரில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 9.3 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது 9 கோடியை முதல் முறையாக தொட்டிருந்தது.
முதல் இடத்தில் எச்டிஎஃசி உள்ளது. இதன் மொத்த கிரெடிட் கார்டு 1.88 கோடி. செப்டம்பரில் புதிதாக 3 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கியிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மட்டும் 1.56 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க.. கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருக்கிறதா?
வரும் அக்டோபரில் இருந்து பண்டிகைக் காலம் என்பதால், பல பயனாளர்கள் செலவுகளை தள்ளிப்போட்டிருக்கலாம் என்பதால், செப்டம்பரில் கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக, கிரெடிட் கார்டு வைத்து ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதே அதிகமாக இருக்கும் என்கிறது புள்ளிவிவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்







