கராச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது இரண்டு வயது மகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் தாஹிர் என்பவர் தனது இரண்டு வயது மகள் அனுமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தந்தை மற்றும் மகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இருப்பினும் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது வழிப்பறி சம்பவமா அல்லது திட்டமிட்ட படுகொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட புல்லட் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும், கராச்சியில் மூன்று பெரிய இலக்கு கொலைகள் பதிவாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது இரண்டு வயது மகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கராச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


