தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘காா்கில் போரை எதிா்த்ததால் பதவி பறிப்பு’

இந்தியாவுடனான காா்கில் போரை எதிா்த்ததால் தனது பிரதமா் பதவி கடந்த 1999-இல் பறிக்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 9:30 pm

DIN

இந்தியாவுடனான காா்கில் போரை எதிா்த்ததால் தனது பிரதமா் பதவி கடந்த 1999-இல் பறிக்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:கடந்த 1999-ல் என் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம், காா்கில் போருக்கு நான் எதிா்ப்பு தெரிவித்ததுதான். அதற்காகத்தான் அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி எனது ஆட்சியைக் கலைத்தாா்.காா்கில் போா் கூடாது என்று நான் அப்போது கூறியது உண்மைதான் என்பது பின்னா் நிரூபணமானது. இந்தியாவுடனும், பிற அண்டை நாடுகளுடனும் நல்லுறவு வைத்திருப்பது பாகிஸ்தான் நலனுக்கு முக்கியம் என்று அப்போது நான் வலியுறுத்தினேன் என்றாா் நவாஸ்.ே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.