இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

என் காதலிக்கு பாதுகாப்பு வேண்டும்: நீதிமன்றத்தை நாடிய பெண்!

தன்பாலின ஈர்ப்பாளரான மனுதாரர், தன் காதலியின் உயிருக்கு அவரது பெற்றோரால் ஆபத்து இருப்பதாகவும், அவரைப் பாதுகாக்குமாறும் கோரியுள்ளார்.

News image
கோப்புப்படம்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:33 pm

DIN

ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த பெண், பெற்றோரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும் தன் காதலியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

தன்பாலின ஈர்ப்பாளர்களான அந்த இரண்டு பெண்களும் காதலித்து வந்தது மனுதாரரின் காதலியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் ஒன்றாக தில்லிக்கு சென்றுவிட்டதாகவும் அவரது காதலியின் பெற்றோர் தன் மேல் கடத்தல் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

புகார் அளித்த விஷயம் தெரியவந்ததும் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று தங்கள் நிலைமையை தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

தன் காதலியின் உறவினர்கள் முன்னிலையில் இந்த வன்முறைச் சம்பவம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் தன் காதலி உத்தரப்பிரதேசத்திற்கு அவரது குடும்பத்தால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து குடும்பத்திற்குத் தெரியாமல் அவரது காதலி தொலைபேசியில் பேசியதாகவும், அங்கு அவர் உயிருக்கே ஆபத்து நேரலாம் எனவும் அவர் தெரிவித்தகாக மனுதாரர் கூறியுள்ளார். 

இந்தப் பிரச்னையை முக்கியமானதாகக் கருதிய உயர் நீதிமன்றம், மனுதாரரின் காதலியை அடுத்த விசாரணைக்கு ஆஜர் படுத்துமாரு சண்டிமந்திர் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.