உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனருமான பில் கேட்ஸ், சக டென்னிஸ் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான பௌலா ஹர்டுடன் காதலில் விழுந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
67 வயதாகும் பில் கேட்ஸ், அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பௌலா ஹர்டுடன் ஒன்றாக டென்னிஸ் போட்டியை ரசித்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
இவருக்கும் நெருங்கிய வட்டாரங்களும், இவர்களது காதலை உறுதி செய்திருப்பதாக சில பொழுதுபோக்கு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், பௌலா ஹர்டு இதுவரை பில் கேட்ஸின் பிள்ளைகளை நேரடியாக சந்திக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டெய்லி மெயில்தான் இவர்களது காதல் பற்றி முதல் செய்தியை பகிர்ந்திருந்தது. இருவருக்கும் நெருங்கிய நட்பு வட்டாரங்களும் இதனை உறுதி செய்திருப்பதாக மேற்கோள்காட்டப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் ஓராண்டுக்கும் மேலாக ஒன்றாக இருப்பதாகவும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகவும் அவர்களது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த பௌலா ஹர்டு?
60 வயதாகும் பௌலா ஹர்டு, ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி மறைந்த மார்க் ஹெர்டுவின் மனைவி. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஹர்டுடன் திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் ஹர்டு மரணமடைந்தார்.
இதையும் படிக்க.. நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை பற்றியபடி தந்தை
சூசகமாகக் கூறியிருந்த பில் கேட்ஸ்..
அண்மையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த பில் கேட்ஸ், டேட்டிங் குறித்து வெளிப்படையாக இருப்பதாகக் கூறியிருந்தார். மீண்டும் உங்கள் வாழ்க்கையில் மிகவும் விருப்பத்துக்குரியவர் ஒருவர் வருவாரா என்ற கேள்விக்கு.. நிச்சயமாக, நான் ஒன்றும் ரோபோ இல்லை என்று பதிலளித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

விஜய் வென்ற விருதுகள்!

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்கலாம் என அரசு நினைக்கிறது! - கனிமொழி கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



