நிலநடுக்கத்திலும் கொள்ளை; துருக்கியில் 48 பேர் கைது!

நிலநடுக்கத்திலும் கொள்ளை; துருக்கியில் 48 பேர் கைது!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்த நாட்டில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலமுறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு 48 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம், ஸ்மார்ட்போன்கள், கணினிகள், நகைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆயுதங்கள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com