ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஸ்பெயினில் காட்டுத்தீ: 4900 ஏக்கர் நிலங்கள் சேதம்

ஸ்பெயினில் இரண்டாவது நாளாகத் தொடரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதம்

News image
Updated On :4 நவம்பர் 2023, 6:17 am

DIN

கிழக்கு ஸ்பெயினில் நேற்று (நவம்பர் 3) ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 4900 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகின.

கிழக்கு ஸ்பெயினின் வாலென்சியா பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென வீசிய புயல் காற்றினால் ஏற்பட்ட காட்டுத்தீ அப்பகுதி முழுவதும் பரவியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள நான்கு நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Story image

காட்டுத்தீயானது தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவி வருகிறது. அதனையொட்டி அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தீயை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.