பாகிஸ்தான்: கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலி, 12 பேர் காயம்

பாகிஸ்தான்: கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலி, 12 பேர் காயம்

பாகிஸ்தானில் கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை மற்றும் பனிப்புயல் பெய்து வருகிறது. இதில் 27 வீடுகள் சேதமடைந்தன.

மேலும் இந்த இயற்கை சீற்றத்துக்கு எட்டு குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் அன்று கைபர் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மழை மற்றும் பனிப்புயல் ஆகியே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com