
தெற்கு பின்லாந்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் 12 வயது மாணவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக அப்பகுதி காவலர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் காயமுற்றுள்ளனர்.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர் சக மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி உபயோகித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 800 பேர் படிக்கும் பள்ளியை காவலர்கள் சுற்றி வளைத்தனர்.
இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி உபயோகித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி பயன்படுத்திய மாணவரும் காயமுற்றவர்களும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.