தெற்கு பின்லாந்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் 12 வயது மாணவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக அப்பகுதி காவலர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் காயமுற்றுள்ளனர்.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர் சக மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி உபயோகித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 800 பேர் படிக்கும் பள்ளியை காவலர்கள் சுற்றி வளைத்தனர்.
இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி உபயோகித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி பயன்படுத்திய மாணவரும் காயமுற்றவர்களும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.