கூகுள் நிறுவனத்துக்கு விதித்த ரூ.400 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது: ரஷியா நீதிமன்றம்

கூகுள் நிறுவனத்துக்கு விதித்த ரூ.421 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது என்று ரஷியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது

ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டது.

கோப்புப்படம்
எவ்வளவு ஊதியம் இருந்தால் பிரிட்டன் பணி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்?

ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்ஃபாபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு ரூ. 400 கோடி அபராதத்தை மாஸ்கோ நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில், அபராத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து கூகுள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com