விமான என்ஜின் குத்தகை மற்றும் பராமரிப்புக் கட்டணமாக சுமாா் 80 லட்சம் டாலா் (ரூ.74 கோடி) நிலுவைத் தொகையை குத்தகை நிறுவனத்துக்குச் செலுத்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு லண்டன் வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சன்போ்ட் பிரான்ஸ் 02 எஸ்ஏஎஸ்’ நிறுவனத்திடமிருந்து குத்தகையாக பெற்ற 3 விமான என்ஜின்களுக்காக கடந்த 2020 நவம்பா் மாதம் முதல் பராமரிப்புக் கட்டணங்களையும், 2022 ஜனவரி முதல் குத்தகை வாடகையையும் ஸ்பைஸ்ஜெட் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக குத்தகை நிறுவனம் கடந்த 2022-லேயே நோட்டீஸ் அனுப்பியதோடு, 2022-2023 காலகட்டத்தில் தனது 3 என்ஜின்களையும் திரும்பப் பெற்றுள்ளது.
தொடரும் நிதி நெருக்கடி: ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களின் கட்டாய தரையிறக்கம் மற்றும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழல் காரணமாக ஸ்பைஸ்ஜெட் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அண்மைக்காலமாக, ஆகாசா ஏா் போன்ற புதிய நிறுவனங்களின் போட்டியால் தனது சந்தை மதிப்பையும் ஸ்பைஸ்ஜெட் இழந்து வருகிறது. இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அந்நிறுவனத்துக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

தில்லி-டேராடூன் விரைவுச்சாலை ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கங்களின் சக்தியாகும்: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

