இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐக்கிய அரபு நாடுகளில் மழை, வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி

பலத்த காற்று காரணமாக மிகச் சுறுசுறுப்பான துபை பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவை பாதிப்பு

News image
- ஏ.பி.
Updated On :16 ஏப்ரல் 2024, 12:10 pm

DIN

துபை, ஐக்கிய அரபு நாடுகள்: ஐக்கிய அரபு நாடுகளில் மிகக் கடுமையான மழை பெய்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக துபையின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனிடையே, அருகிலுள்ள ஓமனில் மட்டும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.

இரவில் பெய்யத் தொடங்கிய மழை காரணமாக வீதிகளில் குளங்களைப் போல தண்ணீர் தேங்கி நின்றன. பலத்த காற்று காரணமாக உலகின் மிகச் சுறுசுறுப்பான விமான நிலையமான துபை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

வெள்ளம் நிரம்பிய சாலைகளின் வழியே அதிகாலையிலேயே காவல்துறையினரும் அவசரகாலப் பணியாளர்களும் செயல்படத் தொடங்கிவிட்டனர். புயல் மழையைக் கருத்தில்கொண்டு, ஐக்கிய அரபு நாடுகளின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாறு பணிகளை மேற்கொண்டனர். வெளியே சென்ற பலருடைய வாகனங்கள் சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.

Story image

அரேபிய வளைகுடா பகுதியிலுள்ள ஐக்கிய அரபு நாடுகளில் மழை பெய்வது மிகவும் குறைவே. ஆனால், குளிர்கால மாதங்களில் அவ்வப்போது பெய்யும். இதனால் பல சாலைகளில் சரியான வடிகால் ஏற்பாடுகள் இல்லை. இதனால் கன மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு நேரிட்டு விடுகிறது.

பஹ்ரைன், கத்தார், சௌதி அரேபியா ஆகியவற்றில் மழை பெய்தது.

அருகிலுள்ள ஓமனில் கடந்த சில நாள்களாகப் பெய்யும் மழையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.